அரவக்குறிச்சி சட் டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பேசினார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம்,, புஞ்சைபுகழூர் பேரூராட்சியில் செம்படாபாளையம், காகிதபுரம் பேரூராட்சியில் புதுகுறுக்குப்பாளையம் மற்றும் வேட்டமங்கலம், அஞ்சூர், கார்வழி, கூடலூர் மேற்கு, புஞ்சைகாளக்குறிச்சி, தும்பிவாடி, கொடையூர், வெஞ்சமாங்கூடலூர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்து அவர் மேலும் பேசியது:
திமுக தலைவர் தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், ராகுல் காந்தியும்
விவசாயக்கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம், கேபிள் கட்டணம் குறைக்கப்படும், கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கத்தில் அடமான வைக்கப்பட்டுள்ள 5 பவுன் நகை வரை மீட்டுத்தரப்படும். அரவக்குறிச்சி தொகுதியில் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும், புகழூரில் காவிரி ஆற்றின்குறுக்கே தடுப்பணை கட்டப்படும், அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், வேலாயுதம்பாளையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். புஞ்சைப்புகழூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும், வேலாயுதம்பாளையம் மலைக்கோயிலுக்கு மலையடிவாரத்தில் சாலை அமைத்து தரப்படும். திமுகவினர் எப்போதும் சொன்னதைச் செய்வோம்; செய்ததைத் சொல்வோம் என்றார். பிரசாரத்தின்போது வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.