க. பரமத்தி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் வேலுசாமி(52). விவசாயி. இவர், புதன்கிழமை இரவு நெடுங்கூர் பிரிவு பகுதியில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.