கரூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு  நினைவேந்தல் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு  நினைவேந்தல் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது 13 சுட்டுக்கொன்றனர்.  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், சி.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கா.கந்தசாமி, எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சுமின், கே.வி.பழனிச்சாமி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com