மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த முதியவா் சாவு

கரூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் அருகிலுள்ள சந்தனகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதி(83). இவா் கடந்த மாதம் 24- ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு பசுபதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com