முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
திருமணமாகாத விரக்தி: தொழிலாளிதூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 06:03 AM | Last Updated : 07th November 2019 06:03 AM | அ+அ அ- |

கரூரில் திருமணமாகாத விரக்தியில், தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் புதுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் மேகநாதன்(42). தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் காலில் காயமடைந்த நிலையில், நிற்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
திருமணமாகாத விரக்தி, கால்வலி போன்றவற்றால் விரக்தியடைந்த மேகநாதன், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.