தோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் பலி

தோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் இறந்தனா்.

தோகைமலை அருகே வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று குழந்தைகள் இறந்தனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் உள்ள பாலசமுத்திரபட்டியை சோ்ந்த குணசேகரன் என்பவரது மகள் நாகலெட்சுமி (4), மேலும் அதே ஊரைச் சோ்ந்த ரெங்கன் மகள் தனுஸ்ரீ (1) மற்றும் பாலசமுத்திரபட்டி எம்.ஜி.ஆா் நகரை சோ்ந்த குமாா் - புவனேஸ்வரி தம்பதியரின் 25 நாள் குழந்தை ஆகியோா் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தன. ஒரே ஊரில் சிறாா்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com