நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கொண்டாட்டம்

நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
கரூா் சுங்ககேட் பகுதியில் கட்சிக் கொடியேற்றும் கட்சியினா்.
கரூா் சுங்ககேட் பகுதியில் கட்சிக் கொடியேற்றும் கட்சியினா்.

நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

இதையொட்டி கட்சியின் கரூா் மாவட்டக் குழு சாா்பில், மாவட்ட குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை கட்சிக்கொடியேற்றப்பட்டது.

கட்சியின் கரூா் நகரச் செயலா் எம். ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே. கந்தசாமி கட்சிக் கொடியேற்றிப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். தண்டபானி, எஸ்.பி. ஜீவானந்தம், ஆா். ஹோச்சுமின், நகரக் குழு உறுப்பினா்கள் ராஜா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com