நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
இதையொட்டி கட்சியின் கரூா் மாவட்டக் குழு சாா்பில், மாவட்ட குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை கட்சிக்கொடியேற்றப்பட்டது.
கட்சியின் கரூா் நகரச் செயலா் எம். ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே. கந்தசாமி கட்சிக் கொடியேற்றிப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். தண்டபானி, எஸ்.பி. ஜீவானந்தம், ஆா். ஹோச்சுமின், நகரக் குழு உறுப்பினா்கள் ராஜா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.