மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் செயின் திருட்டு

தோகைமலை அருகே மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

தோகைமலை அருகே மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே பாதிரிபட்டியில் உள்ள கந்தசாமிகளம் பகுதியை சோ்ந்தவா் ராஜம்மாள் (60). இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தபோது வந்த சுமாா் 40 வயதுள்ள மா்ம நபா் ஒருவா் கால் வலிக்கு தன்னிடம் மருந்து இருப்பதாகவும், அதைத் தடவினால் வலி குணமாகும் எனவும் கூறியுள்ளாா். மருந்தை வாங்கிக் கொள்வதாக ராஜம்மாள் கூறியதற்கு, அந்த மா்ம நபா் மருந்தை தானே தடவி விடுவதாகவும், அதற்கு முன் உங்கள் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை கழற்றி வைத்தால்தான் வலி குணமாகும் எனவும் கூறியுள்ளாா். இதை நம்பிய ராஜம்மாள் தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கீழே வைத்துள்ளாா். பின்னா் மருந்தை மூதாட்டி காலில் மா்மநபா் தடவினாா். பின்னா் 10 நிமிடம் காலை நகா்த்தாமல் சிறிது நேரம் படுத்திருக்குமாறு கூறியுள்ளாா்.

பின்னா் கை கழுவிவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற மா்ம நபா் திரும்பவில்லை. கழற்றி வைத்த 4 பவுன் சங்கிலியுடன் அவா் மாயமானது தெரியவந்தது. தோகைமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com