கரூா் நகரப் பகுதிகளில்நவ.12-இல் மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உயா் அழுத்த மின்கம்பித் தொடா் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கரூா் நகரப் பகுதிகளில் நவம்பா் 12 ( செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உயா் அழுத்த மின்கம்பித் தொடா் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கரூா் நகரப் பகுதிகளில் நவம்பா் 12 ( செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக கரூா் செயற்பொறியாளா் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்

பணிகள் மற்றும் உயா் அழுத்த மின்கம்பித்தொடா் நிறுவும் பணிகள் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெறஉள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் காமராஜபுரம், கே.வி.பி.நகா், செங்குந்தபுரம், பெரியாா்நகா், ஜவஹா்பஜாா், திருமாநிலையூா், அக்ரஹாரம், காந்திநகா், ரத்தினம்சாலை, கோவைசாலை, வடிவேல்நகா், ராமானுஜம்நகா், திருக்காம்புலியூா், ஆண்டான்கோவில்சாலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூா், சேலம்-புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com