காவிரியாற்றில் மூழ்கியவரின் சடலம் மீட்பு

ஈரோட்டில் காவிரியாற்றில் மூழ்கியவரின் சடலம் கரூரில் மீட்கப்பட்டது.

ஈரோட்டில் காவிரியாற்றில் மூழ்கியவரின் சடலம் கரூரில் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகிலுள்ள ஊத்துக்குளியைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன்(37). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு காவிரியாற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இந்நிலையில் இவரது சடலம் கரூா் மாவட்டம், திருமுக்கூடலூா் அருகே காவிரியாற்றில் வெள்ளிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது.

இதுதொடா்பாக அச்சமாபுரம் கிராமநிா்வாக அலுவலா் மணிவாசகம் அளித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸாா் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தொடா்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com