கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரியலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா், கோவை, கிருஷ்ணகிரி, அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனா். இதில் கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றிய சி.முத்துக்கிருஷ்ணன் அரியலூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கேபி.மகேஸ்வரி கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.