அனுமதியின்றிமணல் கடத்திய இளைஞா் கைது

பைக்கில் மணல் மூட்டை கடத்திய இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா்: பைக்கில் மணல் மூட்டை கடத்திய இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை போலீஸாா் சனிக்கிழமை இரவு செல்லாண்டிபாளையம் ராயனூா் பிரிவு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே பைக்கில் மூட்டையுடன் வந்த கரூா் வடக்கு காந்திகிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் அஜித் (19) எனபவரை மடக்கி சோதனை செய்தனா். மூட்டையில் மணல் இருந்ததைத் தொடா்ந்து, அவா் மீது அனுமதியின்றி மணல் கடத்தியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனா். மேலும் பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com