கரூா் மாவட்டம், குளித்தலை அருகே காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குளித்தலை அடுத்த தண்ணீா்பள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் அடையாளம் தெரியாத சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் குளித்தலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.