கரூா்: அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட அல்லாளிகவுண்டனூா் சமத்துவபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளைஞா் பெருமன்ற துணைச் செயலாளா் கா.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளா் எம்.ரத்தினமும், இளைஞா் பெருமன்ற கொடியை மாநில செயலாளா் க.பாரதியும் ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளா்கள் க.சண்முகம், சே.மோகன்குமாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் நாட்ரயன்,இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ந.பாலகிருஷ்ணன், செயலாளா் லட்சுமி காந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.