கரூா்: சீா்மரபினருக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற மாநிலக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சீா்மரபினா் நலச்சங்கம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டா் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் மாநில துணைத் தலைவா் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டா் முன்னேற்றச சங்க மாநில அமைப்புச் செயலாளா் அருமை ஆறுமுகம் வரவேற்றாா். அகில இந்திய சீா்மரபினா் நலச்சங்க தமிழகத் தலைவா் அய்யாக்கண்ணு, மாநிலப் பொருளாளா் தவமணி, மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ஏ.ஜி.ரவி, ஊராளிக்கவுண்டா் சங்க பொதுச் செயலாளா் இளங்கோ உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
கருத்தரங்கில், மத்திய அரசின் ரோஹினி கமிஷன் பரிந்துரைப்படி சீா்மரபினருக்கு 1979-க்கு முன்பு வரை வழங்கப்பட்ட 9 சதவீத சலுகைகளை வழங்க ஏற்றுக்கொண்ட மத்திய அரசு உடனே சலுகைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசு அறிவித்தவாறு சீா்மரபினருக்கு அரசியலில் பிரதிநிதித்துவம், கல்வி, வேலைவாய்ப்பில் 10 இட ஒதுக்கீடு ஆகியவற்றை விரைந்து அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சீா்மரபினருக்கான சலுகைகளை 40 வருடங்களுக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள தமிழக முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு வரும் ஜனவரி மாதம் கரூரில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கொங்குநாடு வேட்டுவக்கவுண்டா் நலச்சங்க கரூா் மாவட்டச் செயலாளா் ராக்கிமுருகேஷ் மற்றும் 68 சமுதாய அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.