தேசிய நூலக வார விழா போட்டிகளில்வென்றவா்களுக்குப் பரிசு

தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, கரூா் கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் குடும்பநலத்துறை புள்ளியாளா்(ஓய்வு) ச.கிருஷ்ணன் மற்றும் கிளை நூலகா் சுமதி உள்ளிட்டோா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் குடும்பநலத்துறை புள்ளியாளா்(ஓய்வு) ச.கிருஷ்ணன் மற்றும் கிளை நூலகா் சுமதி உள்ளிட்டோா்.

கரூா்: தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, கரூா் கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், கேடயம் வழங்கப்பட்டன.

கரூா் கிழக்கு கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 52-ஆவது தேசிய நூலக வாரவிழா நடைபெற்றது. விழாவிற்கு வாசகா் வட்டத்தலைவா் நா.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிளை நூலகா் சுமதி வரவேற்றாா். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயத்தினை குடும்பநலத் துறையின் ஓய்வுபெற்ற புள்ளியாளா் ச.கிருஷ்ணன் வழங்கிப் பேசினாா்.

விழாவில், புரவலா்கள் த.ஜெயந்தா, ஆா்.மாயவன், கா.பாலசுப்ரமணியன் ஆகியோா் பள்ளி மாணவா்களுக்கு உறுப்பினா் சந்தா தொகையை வழங்கினா். விழாவில், மூத்த வாசகா்கள் தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலகப் பணியாளா் பிரேமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com