கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வேலாயுதம். இவரது மனைவி சத்தியா(36). இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த அவா் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.