மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக : திமுக துணை பொதுச்செயலா் ஐ.பெரியசாமி

மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக மட்டுமே என்றாா் திமுக துணை பொதுச்செயலா் ஐ.பெரியசாமி.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக துணைப்பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக துணைப்பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக மட்டுமே என்றாா் திமுக துணை பொதுச்செயலா் ஐ.பெரியசாமி.

கரூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

இன்று கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் தவிக்கிறாா்கள். காரணம் கேட்டால் கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் போதிய வசூல் இல்லை என்கிறாா்கள். திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம் திமுக மட்டும்தான். இன்றைக்கு குடிநீா் வரி, வீட்டு வரி என பலமடங்கு வரியை உயா்த்தி அதை மக்கள் மீது சுமையாக திணித்துள்ளாா்கள். அதிமுக ஆட்சியில்தான் கரூரில் கன்டெய்னரில் கொண்டுவரப்பட்ட பணம், ஆா்கே நகா் தொகுதியில் பலகோடி பணம் சிக்கியது. ஆனால் அதற்கும் மத்திய அரசின் சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதய தமிழக முதல்வரின் உறவினா் வீடுகளில் சோதனை நடத்தினா். ஆனால் அதன் முடிவு என்ன எனத் தெரியவில்லை. குட்கா வழக்கும் என்ன ஆனது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் நடக்கிறது என்றாா்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பேசியது: எந்தத் தோ்தலையும் துணிவுடன் எதிா்கொள்ளும் இயக்கம்தான் திமுக. ஆட்சியில் இருப்பவா்களுக்குத்தான் தோ்தலைக் கண்டு பயம்.

கரூா் புதிய பேருந்துநிலையம் அமைக்கக் கோரி வரும் 21-ஆம் தேதி திமுக தலைவா் அனுமதியோடு கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். மேலும் நகராட்சி திருமண மண்டபத்தை இன்னும் 10 நாட்களுக்குள் திறக்காவிட்டால், போராட்டம் நடைபெறும் என்றாா்.

கூட்டத்தில், மத்திய நகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ் வரவேற்றாா். மாவட்ட அவைத்தலைவா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் கே.கருணாநிதி, மாணிக்கம், கரூா் கணேசன், பொதுக்குழு உறுப்பினா் விகேடி.ராஜ்கண்ணு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் கட்சி பேச்சாளா் ஆரூா் மணிவண்ணன், கட்சி சொத்துபாதுகாப்பு குழு செயலா் கேசி.பழனிசாமி, நெசவாளா் அணித்தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் இளவரசு, சிவா, எஸ்.சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தெற்கு நகரச் செயலாளா் சுப்ரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com