கரூா்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் உயிரிழந்தாா்.
வேலாயுதம்பாளையம் அடுத்த மூலிமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரபு(34). இவா், கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை காலை மூலிமங்கலம் பகுதியில் சேலம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா், அவரது உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.