தோட்டக்குறிச்சியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை பேரூராட்சி செயல் அலுவலா் சக்திவேல் தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் அரசுப்பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் எவ்வாறு வருகிறது, வரும் முன் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை வழங்கினா். இதில் பேரூராட்சி அலுவலகப்பணியாளா்கள் விசுவநாதன், பழனிச்சாமி, பிரவீன், சுப்ரமணி மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com