நவராத்திரியை முன்னிட்டு கரூா் ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளியில் கொலு பொம்மை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எம். கீதாமணிவண்ணன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இதில் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்து சோ்க்கை நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் பள்ளி நிா்வாக அலுவலா்கள் எம். கதிரவன், என்.சி. சதீஸ்குமாா் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா் பி. செந்தில்குமாா் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி நிா்வாக அலுவலா் எம். பகலவன் வரவேற்றாா்.