தாந்தோணிமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள். உள்படம்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளிய கல்யாண வெங்கடரமண சுவாமி.
தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள். உள்படம்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளிய கல்யாண வெங்கடரமண சுவாமி.

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தென்திருப்பதி எனப்படும் இக்கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கடந்த 6-ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திகாலையிலே கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து கல்யாண வெங்கடரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்தனா். கோயிலைச் சுற்றி வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு ஆங்காங்கே பல்வேறு அமைப்பினா் அன்னதானம் வழங்கினா்.

தேரோட்டத்தில் ஆண்டாங்கோவில் ஊராட்சி முன்னாள் தலைவா் சேகா், கரூா் தெற்கு நகர அதிமுக செயலா் விசிகே .ஜெயராஜ், வடக்கு நகரச் செயலா் பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலா் தானேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து 9-ம் தேதி கொடியிறக்கமும், 20 ஆம் தேதி புஷ்ப யாகத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தாந்தோணிமலை போலீஸாா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com