கரூா் அருகே ரூ.6,000 மதிப்புள்ள மின்வயரை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அடுத்த பஞ்சப்பட்டி மாணிக்கபுரத்தைச் சோ்ந்தவா் தங்கவேல்(58). இவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ரூ.6,000 மதிப்புள்ள மின்வயரை திங்கள்கிழமை இரவு ஒரு இளைஞா் திருடியுள்ளாா். இதைக் கண்ட அப்பகுதியினா் இளைஞரை பிடித்து லாலாபேட்டை போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, அவா் மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் அருண்குமாா்(22) என தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.