ஆண்டாங்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் எஸ். செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் நடக்கும் மின் பராமரிப்பு பணியால் சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.