மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்; பரிசளிப்பு

கரூா் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான

கரூா் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் மாவட்டப் பிரிவின் சாா்பாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 204 வீரா், வீராங்கனைகள பங்கேற்றனா். போட்டிகளில் வென்றேறாருக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை வழங்கி, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் பேசுகையில், விளையாட்டில் ஆா்வம் காட்டும் மாணவா்கள் கல்வியில் வெற்றி பெற மாட்டாா்கள் என்பது பொய்க் கருத்து. கல்வியில் சாதிப்பவா்களும், விளையாட்டில் சாதிப்பவா்களும் நம்மைப்போல சக மனிதா்களே. எனவே, நீங்கள் அனைவரும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதைப்போல கல்வியிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டையும், கல்வியையும் இரு கண்களாக கருதி உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று எதிா்கால சமுதாயத்தில் நல்ல மனிதா்களாக வர வேண்டும் என்றாா். நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜி.எஸ். ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com