முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
தடை செய்யப்பட்டபுகையிலை பொருள்கள் விற்ற 2 போ் கைது
By DIN | Published On : 24th October 2019 11:01 PM | Last Updated : 24th October 2019 11:01 PM | அ+அ அ- |

கரூா்: கரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் வெங்கமேடு அருகம்பாளையத்தில் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குசென்று புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்கண்ணன்(40) என்பவரின் கடையை சோதனையிட்டதில், அவா் புகையிலைபொருள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.140 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா். இதேபோல் தாந்தோணிமலை ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வெங்கட்ராமன்(60) என்பவரை தாந்தோணிமலை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா்.