தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவருக்கு திருக்குறள் பேரவை நிதியுதவியை புதன்கிழமை வழங்கியது.
கரூா் தொழிற்பேட்டையைச் சோ்ந்த மாணவா் ஆகாஷ். கரூா் வெற்றி விநாயகா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா். ஜூடோ வீரா். இவா், மாவட்ட, மண்டல அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளாா். தற்போது புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க உள்ளாா். இவா், சீருடை மற்றும் பயணச்செலவு உதவி கேட்டதையடுத்து, கருவூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன், ஆரியாஸ் ஹோட்டல் ராஜ்மோகன், ஆவண அமைப்பாளா் காா்த்திகேயன், ஆனிலை பாலமுருகன், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் காா்த்திகேயன், ஜெயா பொன்னுவேல், சரஸ்வதி அசோகன் பா.மருதை உள்ளிட்டோா் மாணவரிடம் நிதியுதவி மற்றும் சீருடைகளை வழங்கினா்.