குளித்தலை அருகே அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது விற்பதாக குளித்தலை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, அனுமதியின்றி மதுவிற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.