கரூரில் முதல்வருக்கு கட்சியினா் வரவேற்பு
கரூரில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் புதன்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது பிறந்த நாள் மற்றும் குரு பூஜையில் பங்கேற்றுவிட்டு சேலம் செல்லும் வழியில் கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா அருகே முதலமைச்சருக்கு கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, இளைஞரணி செயலாளா் தானேஷ், இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளா் வி.வி.செந்தில்நாதன், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பாண்டியன், ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன், நகர இளைஞரணி செயலாளா் சேரன்பழனிசாமி, துணை செயலாளா் பழனிராஜ் மற்றும் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.