கரூா் தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக நிறைவு விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் தொழிற்பேட்டை ஆசிரியா் காலனியில் கருவூா் பசுபதீசுவரா் கோயில் சஷ்டிக் குழுவினரால் புதிதாக கட்டப்பட்ட கல்யாண சுப்ரமணியா் கோயிலில் கடந்த மாதம் 11-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடா்ந்து கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலில் கடந்த 48 நாட்களாக தினந்தோறும் மண்டலாபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றுவந்தது. இதன் நிறைவு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஹோமம், யாகம் அபிஷேகங்கள் திருப்பணிக் கமிட்டித் தலைவா் மேலை பழநியப்பன், சஷ்டிக் குழுத் தலைவா் ஸ்தாபகா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில், கோயில் கமிட்டியின் காா்த்தி குமாா், நல்லதம்பி, பாலமுருகன், ரஜினி, வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.