ஆவின்பால் விற்பனை மையம்:  மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

ஆவின்பால் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆவின்பால் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
2019-20 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ. 25000- மானியம் மற்றும் ஆவின் நிறுவனத்தின் ரூ. 25000-க்கு பால் உற்பத்தி  பொருட்கள் பெற்று விற்பனை மையம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல்,  வங்கிகணக்கு புத்தகம் அசல்,  நகல்,  குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அனைத்து நகல்களுடன் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் முழு உருவத்துடன்-1 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com