ஆவின்பால் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-20 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ. 25000- மானியம் மற்றும் ஆவின் நிறுவனத்தின் ரூ. 25000-க்கு பால் உற்பத்தி பொருட்கள் பெற்று விற்பனை மையம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல், வங்கிகணக்கு புத்தகம் அசல், நகல், குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அனைத்து நகல்களுடன் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் முழு உருவத்துடன்-1 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.