தோகைமலை அருகே பைக் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட பொறைக்கிழாம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (54), கூலித்தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை பேரூர் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு பேரூர்-கள்ளை சாலையில் தனியார் ஷா மில் அருகே நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பைக் மோதி படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர்திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இதுதொடர்பாக தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து பைக்கை ஓட்டி வந்த கூடலூர் ஊராட்சி சின்னராசாபட்டியை சேர்ந்த ஆண்டி மகன் பூமிநாதன் (35) என்பவரை தேடி வருகின்றனர்.