கரூரில் வரும் 27-ஆம் தேதி தனியார் வேலைவாய் ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
முகாம் மூலம் 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசிஸ்ட், பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 - 223555 என்ற எண்ணிலும் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம்.