புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். 

புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த செல்லிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு (33).  குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை அதே பகுதியில் டாக்டர் தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதியில் புறா பிடிக்க போதையில் சென்றதாக கூறப்படுகிறது. 
அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com