கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய இடிமின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலவிடுதியில் 76.2 மி.மீ மழை பதிவானது.
கர்நாடகம், கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்துவருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான கோடை வெயில் தாக்கிவந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ùளஇந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு விடிய, விடிய மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்): கரூர்-44.3, அரவக்குறிச்சி-8, அணைப்பாளையம்-15, க.பரமத்தி-32.2, குளித்தலை-19, தோகைமலை-24, கிருஷ்ணராயபுரம்-25.4, மாயனூர்-26, பஞ்சப்பட்டி-45.6, கடவூர்-25, பாலவிடுதி-76.2, மைலம்பட்டி-63 என மழை பதிவானது.