கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கீழடை பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(80). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதகவி(51) என்பவருக்கும் இடையே, வீட்டின் அருகே பொதுவழியை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருதகவியும், அவரது மனைவி ஆனந்தி(45) என்பவரும் சேர்ந்து ரெங்கசாமியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கசாமி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரெங்கசாமி அளித்த புகாரின்
பேரில் மாயனூர் போலீஸார் மருதகவி, ஆனந்தி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.