அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை இரவு


கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மேலும் பேசியது: 
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக, குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்து குடிநீர் தட்டுப்பாட்டை ஒரு சில நாட்களில் சரி செய்தவர் தமிழக முதல்வர். 
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக அழிந்துபோகும் என சிலர் கனவு கண்டனர். ஆனால் அவர்களின் கனவெல்லாம் பொய்த்துபோய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2021-இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அதிமுதான் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என்றார். 
 முன்னதாக கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பொரணி.கே.கணேசன் வரவேற்றார்.
தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆலம் கே.தங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் வகித்தனர். 
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல்அமீது, மாவட்ட இளைஞரணி செயலாளர் தானேஷ் மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com