குளித்தலையில் மினி லாரியில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை நடுவதியம் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி காவிரி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநா் குளித்தலை அடுத்த ஐநூற்றுமங்கலத்தைச் சோ்ந்த ஆறுமுகம்(22) என்பவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.