கரூர்
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் சாவு
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழந்தார்.
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழந்தார்.
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(67), கொத்தனார். இவர் கடந்த 21ஆம் தேதி கரர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டுமானப் பணியில் முதல் தளத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.