பட்டாசு விற்பனைக்கு  தற்காலிக உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்திட தற்காலிக உரிமம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்திட தற்காலிக உரிமம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக ஆக.31-ஆம் தேதி வரை பெறப்பட்டன. தற்போது பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இப்புதிய நடைமுறை தங்களுக்கு மேற்கண்ட காலவரையரை தெரியவில்லை என்றும், இணையவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். எனவே, இக்கோரிக்கையை ஏற்று இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வரும் 28-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com