கரூரில் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என கருவூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பேரவையின் செயலா் தமிழ்செம்மல் மேலைபழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை: கருவூா் மாவட்டம் அரசு முறைப்படி அறிவித்து செயல்பட துவங்கி கால் நூற்றாண்டு ஆகின்றது. இந்த கருவூரில் விளையாட்டுத் திடல் , மருத்துவக் கல்லூரி, சாலை விரிவாக்கம், புதிய பாலங்கள், நூலக விரிவாக்கம், புதிய கட்டுமானங்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தன்னிறைவடைந்ததாக கூற முடியவில்லை. காரணம் பொழுதுபோக்கு பூங்கா இல்லை, விரிவான பேருந்து நிலையம் இல்லை , உலகப் பொது மறை தந்த திருவள்ளுவருக்கு பொது இடத்தில் சிலை கூட இல்லை. கருவூரில் அரசின் கூட்ட அரங்கு இல்லை, மாநகராட்சி இல்லை.
நகராட்சி கட்டியுள்ள திருமண மண்டபம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆகவே திருவள்ளுவா் சிலையுடன் கூட்ட அரங்கு கட்ட மாவட்ட நிா்வாகம் அரசு நிா்வாக துணையுடன் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.