சிட்கோவில் தொழில்மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்

புஞ்சைக்காளக்குறிச்சி  சிட் கோ தொழிற்பேட்டையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தொழில்மனைகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்  ஆட்சியர் த.அன்பழகன்.  


புஞ்சைக்காளக்குறிச்சி  சிட் கோ தொழிற்பேட்டையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தொழில்மனைகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்  ஆட்சியர் த.அன்பழகன்.  
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி வட் டம், புஞ்சைக்காளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி பின்னலாடை பூங்கா பகுதியில் சிட்கோ நிறுவனத்தால் தொழில் மனைகளுக்கு முழுத்தொகை விற்பனை மற்றும் 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்காக ஜவுளி மற்றும் பின்னலாடை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள மனைகள் பற்றிய விவரம், அதன் தற்காலிக விலை அனைத்து விபரங்களை  இணையதளங்களில் காணலாம். விண்ணப்பங்களை பொது மேலாளர் (நிர்வாகம்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், சிட்கோ தலைமை அலுவலக வளாகம், கிண்டி, சென்னை -600032 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com