தனியார் பேருந்தில் பெண்ணிடம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த குமார் மனைவி ஸ்ரீவித்யா(40). இவர் திருச்சி-பாளையம் செல்லும் பேருந்தில் கரூர் மாவட்டம், தோகைமலைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். அப்போது தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த பணம் ரூ.63,000 மற்றும் 3 பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இதுதொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.