பேருந்தில் பெண்ணிடம் பணம், நகை திருட்டு

தனியார் பேருந்தில் பெண்ணிடம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


தனியார் பேருந்தில் பெண்ணிடம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த குமார் மனைவி ஸ்ரீவித்யா(40). இவர் திருச்சி-பாளையம் செல்லும் பேருந்தில் கரூர் மாவட்டம், தோகைமலைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். அப்போது தனது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த பணம் ரூ.63,000 மற்றும் 3 பவுன் நகையை யாரோ மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com