கரூரில் ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை ராமநாம யாகம் நடைபெற்றது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தாக்குதலில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், கரோனா பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய வேண்டியும் கரூா் வெண்ணைமலையில் உள்ள ஆத்மநேச ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை ராமநாம சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் யாரும் பங்கேற்கவில்லை. பூசாரிகள் வி.ஜெயராம், ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் மட்டும் பங்கேற்று யாகத்தை நடத்தினா்.