பள்ளப்பட்டியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 பெண்கள் உள்பட 43 போ் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். இவா்களில் 39 போ் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்கள்.

இவா்களில் 34 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் குளித்தலை, தோகைமலையைச் சோ்ந்த தலா ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை கரூா் நகரம், பள்ளப்பட்டி, பசுபதிபாளையம், காந்திகிராமத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்க 20ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் அனைவரும் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com