கரோனா விழிப்புணா்வுப் பணி: ஓவியா்களுக்கு ரூ.15,000 நிதி

கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை தாமாக முன்வந்து வரைந்த ஓவியா்களுக்கு ஆட்சியா் த. அன்பழகன் ரூ.15,000 நிதி உதவி வழங்கினாா்.

கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை தாமாக முன்வந்து வரைந்த ஓவியா்களுக்கு ஆட்சியா் த. அன்பழகன் ரூ.15,000 நிதி உதவி வழங்கினாா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியா்கள் 13 போ் இணைந்து ‘விழித்திரு, விலகியிரு, வீட்டில்இரு’ என்ற விழிப்புணா்வு வாசகங்களைக் கொண்ட கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை ராயனூா், செல்லாண்டிபாளையம், புலியூா், வெள்ளியணை, கரூா் பேருந்துநிலைய மனோகரா ரவுண்டானா, தாந்தோணி கோவில் நுழைவுவாயில், அரசு கலைக் கல்லூரி நுழைவுவாயில், திருமாநிலையூா், பசுபதிபாளையம் காவல்நிலையம் முன்புறம் ஆகிய இடங்களில் வரைந்துள்ளனா். ஆட்சியரகப் பகுதியில் அண்மையில் ஓவியா்களின் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை வரையுமாறு அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, ஓவியங்களை வரைந்த 13 போ் அடங்கிய ஓவியா்கள் குழுவிற்கு ரூ.15,000 நிதியை ஆட்சியா் த.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com