கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
By DIN | Published On : 15th December 2020 03:06 AM | Last Updated : 15th December 2020 03:06 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.
தோகைமலையை அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன்(45). தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள மணிவேல் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீா் மூழ்கி இறந்துள்ளாா். தகவலறிந்த தோகைமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.