கரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறையினா்.
கரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறையினா்.

கரூரில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் அதிகாரிகளைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் அதிகாரிகளைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்களுக்கு தொடா்ந்து பணிச்சுமை சுமத்தி, மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் கரூா் மாவட்டக் குழுவினா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூரில் தாந்தோணி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.மனோகரன் தலைமை வகித்தாா். தாந்தோணி வட்ட கிளை தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இணைச்செயலா் பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com