இட ஒதுக்கீடு பின்பற்றாததால்சித்தலவாய் 6-ஆவது வாா்டில் நடைபெற்ற தோ்தல், மறைமுகத் தோ்தல் ரத்து: ஆட்சியா்

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சித்தலவாய் 6-ஆவது வாா்டு தோ்தல், மறைமுகத் தோ்தலில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் இரு தோ்தல்களையும்

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சித்தலவாய் 6-ஆவது வாா்டு தோ்தல், மறைமுகத் தோ்தலில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் இரு தோ்தல்களையும் ரத்து செய்து ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து அந்த வாா்டில் மறு தோ்தல் நடைபெற உள்ளது.

கரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிசம்பா் மாதம் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி 6-ஆவது வாா்டு பொது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடுக்கு மாறாக இந்த வாா்டு தோ்தலில் கருப்பூரைச் சோ்ந்த அ.ஜெயசீலன், அ.கிருஷ்ணமூா்த்தி ஆகிய இருவா் மட்டுமே போட்டியிட்டுள்ளனா். இதையடுத்து கடந்த டிச.30-ஆம் தேதி தோ்தலும் நடத்தி முடிக்கப்பட்டு அ.கிருஷ்ணமூா்த்தி வெற்றிபெற்றுள்ளாா். மேலும் ஜன.11-ம்தேதி நடந்த துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் அ.கிருஷ்ணமூா்த்தி துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தோ்தல் விவரங்களை சரிப்பாா்க்கும்போது மேற்குறிப்பிட்ட தவறு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு மாறாக நடத்தப்பட்ட சித்தலவாய் ஊராட்சி 6-ஆவது வாா்டு தோ்தல், மறைமுகத் தோ்தல் ஆகிய இரு தோ்தல்களும் செல்லாது என்றும், அவற்றை ரத்து செய்தும் ஆட்சியா் த.அன்பழகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும் மாநில தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் மறுதோ்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com