காா் மோதி தொழிலாளி சாவு: இருவா் படுகாயம்

லாலாபேட்டை அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி இறந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

லாலாபேட்டை அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி இறந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா் சுப்ரமணி (44). இவா் தனது பைக்கில் தந்தை நீலமேகம் (64), உறவினா் கரூா் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மேட்டுமகாதானபுரத்தைச் சோ்ந்த கனகராஜ் மகன் ரிஷிகாந்த் (20) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுமகாதானபுரம் பிரிவு சாலையில் வந்தபோது பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே இறந்தாா். படுகாயமடைந்த நீலமேகம், ரிஷிகாந்த் ஆகியோரை அக்கம்பக்கத்தினா்கள் மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து லாலாபேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநா் திருச்சி மாவட்டம் முசிறி சோ்குடியைச் சோ்ந்த அன்பரசனைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com